தமிழக மீனவர்கள் கைது; விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 64 மீனவர்களையும், 10 விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி மீன் பிடிக்க சென்று தலைமன்னார், நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது செய்தது.
அதனை தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து விசைப்படகையும், 37 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்த நிலையில் 10 விசைப்படகையும், 64 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.