டிடிஎப் வாசனை சுற்றிவளைத்த செய்தியாளர்கள்; பைக்கில் லிப்ட் கேட்டு எஸ்கேப்

பிரபல யுடூபர் டிடிஎப் வாசன் நிபந்தனை ஜாமீனுக்கு கையெழுத்து போட 2-ம் நாள் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜர்.

கையெழுத்துப் போட்டு விட்டு வெளியே வந்த வாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதால், தப்பித்தோம், பிழைத்தோம், என சாலையில் வந்த இருசக்கர வாகன ஓட்டியிடம் லிப்ட் கேட்டு ஏறி சென்றார்.

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தமால் பகுதியில் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

45 நாள் சிறை வாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்த டிடிஎப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி மூன்று வார காலத்திற்கு நாள்தோறும் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட நாள்தோறும் பத்தரை மணிக்கு ஆஜராகி வருகிறார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி டிடிஎஃப் வாசல் இன்று இரண்டாம் நாள் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்திற்கு காரில் வந்து இறங்கி நேரில் ஆஜராகி 10.30 மணி அளவில் கையெழுத்து போட்டு விட்டு சென்றார்.

கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த டிடிஎஃப் வாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது, தப்பித்தோம் பிழைத்தோம் என சாலையில் வந்த இருசக்கர வாகன ஓட்டியிடம் விட்டு கேட்டு ஏறிக்கொண்டு வேகமாக சென்று விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *