காவல் ஆய்வாளர் & உதவி ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்; மகிளா நீதிமன்றம் அதிரடி

கரூர் மாவட்டம் தோகமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி நசீமா பானு அதிரடி உத்தரவு.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கடந்த 01-03-21 ஆம் தேதி சத்தியா என்ற பெண் நடந்து செல்லும் போது அவரது கணவர் சதீஷ்குமார் என்பவர் கெட்ட வார்த்தையால் பேசி அரிவாளால் கை, முகம், தலை உள்ளிட்ட பகுதியில் வெட்டி காயப்படுத்தியுள்ளார் இது தொடர்பாக தோகைமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கானது கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் விசாரணைக்காக தோகைமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன், ஆய்வாளர் காசி பாண்டியன் ஆகிய இருவரையும் இன்று 02-11-23 ம் தேதி நேரில் ஆஜராக கூறி நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று இந்த இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த இருவருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து மகிளா  நீதிமன்ற நீதிபதி நசிமா பானு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *