மின்சார வாரியத்தை கண்டித்து, தொழிற்சங்க கூட்டமைப்பு முற்றுகை போராட்டம்

மின்சார வாரியத்தை கண்டித்தும் மின்சார வாரியத்தில் உள்ள 60,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் டான்ஜெட்கோவை மூன்றாக பிரிப்பதை கைவிட வேண்டும் மின்சார வாரிய ஆணை 2 ஐ ரத்து செய்ய வேண்டும் ண உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்கம் ,மின்சார வாரிய பொறியாளர் சங்கம் ,அம்பேத்கர் எம்ப்ளாயிஸ் யூனியன் , தேசிய மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழக அரசு மற்றும் மின்வாரியத்தை கண்டித்தும் டேன்ஜெட்கோவை  மூன்றாக பிரிப்பதை கைவிட வேண்டும், 

ஈ டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை கிளாஸ்1 மற்றும் 2 ஊழியர்களுக்கு உடனே வழங்கிட வேண்டும், மின்சார வாரியத்தில் உள்ள 60,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ,ஆறு சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ,மின்சாரவாரிய ஆணை 2ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனல் மின் நிலையத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் மின்சார வாரியத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *