பள்ளி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் புது மாப்பிள்ளை பரிதாப பலி
அரியலூர் மாவட்டம் செந்துறையில் அன்னை தெரசா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி பேருந்து 80 மாணவர்களுடன் செந்துறையில் இருந்து அங்கனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
குழுமூர் கிராமத்தில் 55 மாணவர்களை இறக்கிவிட்டு விட்டு 25 மாணவர்களுடன் அங்கனூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. ஆனை வாரி ஓடை பாலம் அருகே வைக்கப்பட்டிருந்த எள்ளுகாய் குவியலை ஒதுக்கிவிட்டு பேருந்து வளைவில் திரும்பியது. அப்பொழுது பழமலைநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் வயது 27 என்பவர் தனது உறவினருடன் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வழியாக பழமலைநாதபுரம் நோக்கி தனது காரில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது பள்ளி பேருந்தில் முன்பு அதில் நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல் நெருங்கி நொறுங்கி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் கடந்த ஆண்டு திருமணம் ஆன புது மாப்பிள்ளை விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார் அவருடன் காரில் வந்த புரோட்டா மாஸ்டர் செங்கமலை படுகாயம் அடைந்தார்.
அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் காயம் காயம் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த செங்கமலையை மீட்டு சிகிச்சைக்காக செந்துறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி மாணவர்களுடன் பேருந்து கார் மோதிய கோர விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்பட்டத்தியுள்ளது.