அதிகாரியின் நெருக்கடியால் அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை முயற்சி
பெருந்துறையில், உயர் அதிகாரியின் நெருக்கடியால் அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலைக்கு முயன்றதாக கூறி சக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அதிகாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது..
பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி, உதவி மேலாளர் கடுமையாக பேசியதால், பெருந்துறை பணிமனை ஓட்டுனர் நடராஜ் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெருந்துறை அரசு பேருந்து பணி மனை முன் சக ஓட்டுனர், நடத்துனர்கள் பேருந்தை இயக்க மறுத்து போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வழக்கம் போல் பணிக்கு திரும்பினர்..