கந்துவட்டியால் பத்து ஆண்டுகளாக பரிதவிக்கும் குடும்பம்…!

கந்துவட்டி கொடுமையால்  பத்து ஆண்டுகளாக தவித்து வரும் குடும்பம்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  புகார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி லட்சுமி   என்பவர்   மயிலாடுதுறை மாவட்ட   ஆட்சியரிடம்   கந்து வட்டி கொடுமை செய்து தனது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக வீடியோ பதிவுடன் புகார் மனு அளித்தார்.

17 ஆண்டுகளுக்கு முன்பு  அதே பகுதியில் வசித்துவரும்   அஞ்சமாளிடம் 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை அஞ்சம்மாளின் கணவர் சம்பந்தமூர்த்தியிடம் கொடுத்து தனது மகன் வினோத்தை சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்பியுள்ளார். சொன்ன வேலை கிடைக்காததால்  15 நாளில் மீண்டும் சொந்த ஊர் வந்துள்ளார்.

ரூ.20 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்ககோரி அஞ்சம்மாளும் தனது மகனை சிங்கப்பூருக்கு அனுப்ப வாங்கிய ரூ.1.35 லட்சத்தை திருப்பிக் கொடு என்று லட்சுமியும் சண்டை போட்டுக் கொண்டனர். 

அஞ்சம்மாள் குடும்பத்தினர் கந்துவட்டித்தொழில் செய்துவருவதால் 20 ஆயிரம் ரூபாய்க்கு வட்டியுடன் 1.90 லட்ச ரூபாய் திருப்பிகொடு என்று அஞ்சம்மாள் ஆட்களை வைத்து லட்சுமியை மிரட்டியும் அவரது கணவர் கலியபெருமாள் அவரதுமகன் வினோத் ஆகியோரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இவர்கள் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஆதாரத்துடன் அளித்து நடவடிக்கை வேண்டினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *