அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரித்தவரை வச்சு செய்த போலீசார்

மனப்படையூர் கிராமத்தில் அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரித்த  ஜேசுதாஸ் என்பவர் கைது. இவரிடம் இருந்து அரை கிலோ வெடி மருந்து, 5 கிலோ சோடியம் நைட்ரேட் ,  கரிப் பவுடர் 13 கிலோ பறிமுதல் பறிமுதல்.

கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் காவல்  நிலைய எல்லைக்கு  உட்பட்ட மனப்படையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் உரிமம் பெற்று வெடி தயாரித்து வருகிறார். இவர் எந்த முகவரியில்  வெடி தயாரிக்க உரிமம் பெற்றிருந்தாரோ அந்த இடத்தில் வெடி தயாரிக்காமல் வேறு இடத்தில் நாட்டு வெடி  தயாரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சுவாமிமலை காவல் நிலையத்தார் மணப்படையூர் கிராமத்தில் ஜேசுதாஸிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர் அனுமதி பெற்று மனப்படையூர் கிராமத்தில் வெடி தயாரித்து வருகிறார். ஆனால் இவர் அனுமதி பெறாத இடத்தில் வெடி தயாரித்து  வந்ததால் இவரை சுவாமிமலை காவல் நிலையத்தார் கைது செய்தனர்.

இவரிடமிருந்து வெடி மருந்து அரை கிலோ, கரி பவுடர் 13 கிலோ, சோடியம் நைட்ரேட் ஐந்து கிலோ மற்றும்  சணல் கயிற்றால் கட்டப்பட்ட 440 நாட்டு வெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *