தங்கம் போல் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோவிலின் அழகிய காட்சிகள்
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழாவின் நிறைவு நாளான இன்று பெரியநாயகி அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டது, பரதக்கலைஞர்களின் பரதநாட்டியம் சிறப்பாக நடைபெற்றது
பெரியகோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ம் ஆண்டு சதய விழா நாளை துவங்க உள்ளதையடுத்து, விழாக்கோலம் பூண்டுள்ள பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள்,
“காலத்தால் அழியாத பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை அருகே பக்தர்கள் நின்று குடும்பம் குடும்பமாக செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்” : தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது நிறைவு நாளான இன்று பெரியநாயகி அம்மனுக்கு மகிஷாசுரமர்த்திரி அலங்காரம் செய்யப்பட்டு நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன
மேலும் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பட்டிமன்றம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 25 ஆம் தேதி மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். இதை போல் பல்வேறு இயக்கத்தினர் – அரசியல் கட்சியினர் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்
மேலும் அன்றைய தினம் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சதய விழாவை முன்னிட்டு நகரின் முக்கிய சாலைகள் மின்விளக்குகளால் பந்தல் போல் அலங்கரிக்கப்பட்டு தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. இதேபோல் பெரிய கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது பெரிய கோயில் மின்னொளியில் ஜொலிக்கிறது
சதய விழா துவக்கமாக தஞ்சை மாநகராட்சி சார்பில் பழைமையான அழகிகுளம் வளாகத்தில் தப்பாட்டம், பரதநாட்டியமும் களைகட்டியது விழாவில் மேயர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்