இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்களையும், 5 விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்; ஏராளமான மீனவர்கள் பங்கேற்பு 

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 14ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று சுமார் 500-க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு,   தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மின் பிடித்ததாக கூறி ஐந்து விசைப்படகையும் அதில் இருந்த 27 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதியிலிருந்து மீனவர்கள் கால வரையற்ற  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்களையும் ஐந்து விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 2008 முதல் தற்போது வரை அரசு உடமையாக்கப்பட்ட  படகுகளை மீட்டு தரவும்,

இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மத்திய அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு  ஏராளமான மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *