கொம்பன் இறங்கிட்டான் யாரும் குறுக்க போயிடாதீர்கள்; வனத்துறை எச்சரிக்கை
கட்டைக் கொம்பன் மற்றும் புல்லட் யானைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கிராமங்கள் முழுவதும் வீதி வீதியாக சென்று எச்சரிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பந்தலூர் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கட்டை கொம்பன் மற்றும் புல்லட் என்று அழைக்கப்படும் இரு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடமாடுவது மட்டுமின்றி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் மற்றும் முதுமலையில் இருந்து வரவழைக்கப்பட்ட நான்கு கும்கி யானைகள் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றன.
இருந்த போதும் வனத்துறையினர் கண்ணில் மண்ணை தூவும் இந்த இரு யானைகள் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்த சம்பவம் வனத்துறை மத்தியில் சவாலாக உள்ள சூழ்நிலையில் அந்த யானைகள் வருவதை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறை திணறி வருகின்றனர்.
இரவு நேரங்களில் எச்சரிக்கோடு இருக்குமாறும் குறிப்பாக வீட்டிலிருந்து வெளியில் வர வேண்டாம் எனவும் காட்டு யானைகள் கிராமத்துக்குள் வரும் பட்சத்தில் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டிய எண் (8667325758 )எனவும் ஒலிபெருக்கி கிராமப் பகுதிகளில் அறிவுறுத்தி வருகின்றனர்.