மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை; பேராசிரியர் கைது, 2 மாணவர்கள் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் கைது. 15 நாள் நீதிமன்ற காவல் .சீனியர் மாணவர்கள் 2 பேர் தலை மறைவு.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் மருத்துவர் சுகிர்தா தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து இங்கு பயின்று வரும் நிலையில் கடந்த ஆறாம் தேதி விடுதியில் அவரது அறையில் தனக்குத்தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார் 

இது தொடர்பாக குலசேகரம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்கொலைக்கு முன்பு சுகிர்தா எழுதிய கடிதம் பரப்பரப்பை ஏற்படுத்தியது கடிதத்தின் அடிப்படையில் பேராசிரியர் பரமசிவம் தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அதே போன்று தனது துறையில் சீனியர் மாணவர்களான ப்ரீத்தி மற்றும் ஹரீஷ் ஆகியோர் தன்னை துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்தார் 

அதன் அடிப்படையில் கடந்த ஆறு நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் இன்று பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்தனர். பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் பரம சிவத்தை நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். 

இதனிடையே சீனியர் மாணவர்கள் பிரீத்தி மற்றும் ஹரீஷ்  தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் முன்னதாக பரமசிவம் உட்பட சீனியர் மாணவர்கள் ப்ரீத்தி மற்றும் ஹரீஷ் ஆகியோரும் கல்லூரி நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டு காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *