விரட்ட வந்த வனத்துறையினரை ஓட ஓட விரட்டிய காட்டு யானை..!

ஊருக்கு வரும் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரை திருப்பி விரட்டிய காட்டு யானை அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பிய வனத்துறை காவலர் தற்பொழுது இந்த காட்சி எனது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது காட்டு யானைகளின்  நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வரும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் வீடுகளை சேதப்படுத்துவதும் வனவிலங்கு மனித மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பந்தலூரை அடுத்துள்ள எலியாஸ் கடை இன்னும் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வரும் காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறை குழுவினர் ஈடுபட்டுள்ளனர் .

அப்பொழுது காட்டு யானையை விரட்டும் போது திடீரென ஆக்ரோஷத்துடன் அந்த காட்டு யானை வனத்துறையினரை விரட்டியது அதில் ஒரு வனத்துறை அதிகாரி ஒருவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார் தற்பொழுது இந்த காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *