பீர் பாட்டிலை காட்டி ரூ.1 லட்சத்தை வழிபறி செய்த பலே திருடர்கள்..

சேலம் பேருந்து நிலையம்  அருகே தனியார் எலக்ட்ரிக் கடையில் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன்(27) என்பவர் வசூல்மேனாக வேலை பார்த்து வருகின்றார், 

இவர் கடந்த 23-7 – 2023-ம் தேதி தம்மம்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் வசூல் செய்துகொண்ட ரொக்கம் ரூபாய் 1,10,000த்தையம் எடுத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில்  இரவு சேலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வாழப்பாடி அருகே மேற்கு ராஜா பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஊத்தங்கரை நெடுஞ்சாலையில்   மூன்று நபர்கள் வழிமறித்து பீர் பாட்டில்கள் மூலம் சரமாரி தலையில் தாக்கிவிட்டு குணசேகனிடம் இருந்த 1, 10,000 ரொக்கத்தை பறித்துச் சென்றுள்ளனர், 

அங்கிருந்தவர்கள் அடிப்பட்ட குணசேகரனை  மீட்டு  வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு முதலுதவி செய்து கொண்டு பின்னர் சேலம் தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்று அனுமதித்து சிகிச்சை பெற்றனர்.. 

இது குறித்து வாழப்பாடி போலீஸார் இன்பெக்டர் உமாசங்கர் தலைமையில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு இன்று  கிச்சிபாளையத்தை சேர்ந்த மூன்று பேரை பிடித்து கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *