நண்பனை குத்தி கொலை செய்துவிட்டு மாடு முட்டியதாக நாடகம்… 3 பேர் கைது

மாடு முட்டியதாக கூறி மருத்துவமனையில் சேர்த்த நண்பர்களின் நாடகம் நண்பர்கள் மூன்று பேர் கைது. தலைமாறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியை சேர்ந்த கல்யாணசுந்தரம் – மஞ்சுளா தம்பதியின்  மகன் விவேக்.(25)  மஞ்சுவிரட்டு காளைகளை வளர்ப்பதில் தீவிரமாக இருந்து வந்துள்ளார். இவரது தாயார் மஞ்சுளா என்பவர் கீழச்சிவல்பட்டியில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். விவேக் திருப்பத்தூரில் வாடகைக்கு வீடு பிடித்து அங்கு 2 மஞ்சுவிரட்டு காளைகளை வளர்த்து வருகிறார். 

இப்பகுதிகளில் நடைபெறும் மஞ்சு விரட்டு போட்டிகளுக்கு அந்த காளைகளை அழைத்து சென்று விளையாட வைத்து மகிழ்ச்சி கொள்வது இவரது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அவரது நண்பர் முகமது அபுதாஹிர் என்பவர் திருப்பத்தூர் பிரபாகர்காலனியில் உள்ள விவேக் வீட்டில் வந்து இவரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இரவு சுமார் 1.50 மணியளவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு குடல் சரிந்த நிலையில் மாடு முட்டியதாக விவேக்யைஅவரது நண்பர்களான திருப்பத்தூரை சேர்ந்த முகமது அபுதாஹீர் (35), புதுத்தெருவை சேர்ந்த ஜெயசூர்யா (23) தென்மாபட்டை சேர்ந்த சதீஸ் (31) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில் விவேக்யின்  உடலை அரசு மருத்துவமனையில் விட்டு விட்டு மூவரும் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட திருப்பத்தூர் நகர் போலீசார், திருப்பத்தூர் பகுதியில் உள்ள மதுபானக்கூடத்தில் மது அருந்தும் போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான கண்ணப்பன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் விவேக்கின் உறவினர்கள் கொலை செய்த 7 பேரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என மறுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *