‘பாரத்’ பெயர் மாற்றுவதால் எதுவும் நடக்காது… ஜோதிமணி எம்.பி பதில்

பாரத் என்று பெயர் மாற்றுவதால் ஒரு விளைவுகளையும் ஏற்படுத்தாது. பதினெட்டாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெயர் மாற்ற மசோதா உடன் வரமாட்டார்கள் என்றுதான் என் கருத்து ஏனென்றால் நினைத்தவுடன் அவர்கள் பெயர் மாற்றத்தை கொண்டுவர முடியாது.

பெயர் மாற்றம் கொண்டு வராததற்கு முன்பாகவே குடியரசு தலைவரை பாரத் குடியரசு தலைவர் என்று குறிப்பிட்டுள்ளனர் இது இந்தியா ஆர் எஸ் எஸ் பாஜக மோடி என அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைக்கிறார்கள் இந்த நாடு அவர்களுக்கு சொந்தமானது இல்லை மக்களுக்குத் தான் சொந்தமானது என்பதை வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நிறுவிப்பார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்… கரூர் எம்பி ஜோதிமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *