உடற்பயிற்சி கூடத்தில் நள்ளிரவில் இருவர் வெட்டி கொலை;

செங்குன்றம் அருகே உடற்பயிற்சி கூடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் இருவர் வெட்டி கொலை. ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. காவல்துறையினர் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் நள்ளிரவில் மூவர் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து செங்குன்றம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது இவர் வெட்டுப்பட்டு சடலமாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். 

இதனையடுத்து உடனடியாக 108அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தொடர்ந்து உயிரிழந்த இருவரது சடலங்களை கைப்பற்றிய செங்குன்றம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள் பெருங்காவூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (20), விஜய் (26) என்பதும், அதே பகுதியை சேர்ந்த அஜய்குமார் (27) உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரிய வந்தது. 

தொடர்ந்து கொலைக்கான முன்விரோதம் குறித்து செங்குன்றம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டும், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *