தினமலர் நாளிதழை எரித்து திமுக விவசாய அணியினர் போராட்டம்

கோபி பேருந்து நிலையம் முன்பு தினமலர் நாளிதழை எரித்து திமுக விவசாய அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் குறித்து நேற்றைய தினமலர் நாளிதழில் வெளியான செய்திக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோபி பேருந்து நிலையம் முன்பு திமுக விவசாய அணி  சார்பில் திரண்ட திமுகவினர், பேருந்து நிலையத்தில் விநியோகம் செய்ய தயாராக  இருந்த தினமலர் நாளிதழ்களை எடுத்துச்சென்று தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, நாளிதழை கண்டித்து முழக்கம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தீயை அணைத்தனர்.

திமுகவினரின் போராட்டம் காரணமாக கோபி பேருந்து நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *