ஜிஎஸ்டியை திரும்ப பெற்ற முதல்வருக்கு நன்றி – நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள்
நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளுக்கு உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி கூடுதல் தொகை ஆறு சதவீதத்தை திரும்ப பெற்றுத் தந்த தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எம் சாண்ட் , ஜல்லி ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை. தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மாலை சேலத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திருசங்கு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக முழுவதும் இருந்து சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசானது , கூடுதலாக உயர்த்தப்பட்ட ஆறு சதவீத ஜிஎஸ்டி வரியை, மாநில அரசே ஏற்றுக் கொண்டது. இதற்கு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் தங்களது மனமார்ந்த நன்றியினை தமிழக முதல்வருக்கு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும் தமிழக முழுவதும் உள்ள கல் குவாரிகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயக்க வேண்டும் என்ற அரசின் விதிமுறையை தளர்த்திட வேண்டும் என்றும்., ஜல்லி , எம் சாண்ட் , குவாரி பவுடர் ஆகியவற்றின் விலை உயர்வை குறைத்திட தமிழக அரசு சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்தாக நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திருசங்கு தெரிவித்துள்ளார்.