பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்ததில் பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு…!
அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்ததில் பத்தாம் வகுப்பு மாணவி சுஷ்மிதா (15)உயிரிழப்பு . மற்றொரு மாணவி ராஜேஸ்வரி (15) படுகாயம்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் மாலை காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது பசுபதிகோவில் அருகே கப்ரியேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்ததில் பத்தாம் வகுப்பு மாணவிகள் சுஷ்மிதா மற்றும் ராஜேஸ்வரி என இருவர் காயம் அடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சுஷ்மிதா (15) என்ற மாணவி உயிரிழந்தார். மற்றொரு மாணவியான ராஜேஸ்வரி( 15) உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.