கோயிலுக்கு சென்று திரும்பு வழியில் மினி லாரி மோதி கணவன், மனைவி பரிதாப பலி.
சிதம்பரம் அருகே பைக் மீது மினி லாரி மோதல். கணவன், மனைவி பரிதாப பலி. கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது சோகம்
சிதம்பரம் வாகீசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவரது மனைவி ஹேமா(29). இவர்கள் இருவரும் இன்று பைக்கில் விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூரில் குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் வந்த பைக் புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் சுடுகாடு பகுதி அருகே வந்தது. அப்போது எதிரே வந்த மினி லாரி ஒன்று பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கணவன் மனைவியான மணிகண்டன் மற்றும் ஹேமா தம்பதியினர் தூக்கி எறியப்பட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சிக்கி பலியானார்கள்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.