காய்கறி வெட்டும் கத்தியால் கணவனை 15 இடங்களில் வெட்டிய மனைவி…!

சிதம்பரத்தில் காய்கறி வெட்டும் சிறிய கத்தியால் கணவனை 15 இடங்களில் வெட்டிய மனைவி. தனது சித்தியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை கேட்டபோது கணவர் தாக்கியதால் ஆத்திரத்தில் வெறிச்செயல். 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை

சிதம்பரம் அப்பா பிள்ளை சந்து பகுதியில் வசித்து வருபவர் சுவாமிநாதன் (37). இவர் இப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதா( 36). இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 15 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் கணவன் மனைவியான சுவாமிநாதனுக்கும் சுதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். சுதாவின் சித்தியுடன் சுவாமிநாதன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறி சுதா தனது கணவன் சுவாமிநாதனிடம் கேட்டுள்ளார். அதற்கு சுவாமிநாதன் தனது மனைவி சுதாவை தாக்கி உள்ளார்.

இந்நிலையில் இதை மனதில் வைத்து இன்று சுவாமிநாதன் வீட்டில் இருந்தபோது சுதா காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுமார் 15 இடங்களில் அவரை சரமாரியாக வெட்டி உள்ளார்.

இதனால் பின்பக்க கழுத்து, வலது மார்பு, இடது பக்க வயிறு, மேல் உதடு உள்ளிட்ட பல இடங்களில் சுவாமிநாதனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த சுவாமிநாதன் உடனடியாக அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இந்த சம்பவம் குறித்து சுவாமிநாதன் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார், சுதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *