பனை மரத்தை வெட்டுவது சட்டவிரோதம்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எச்சரிக்கை
மாநில மரமான பனை மரத்தை வெட்டுவது சட்டவிரோதமான செயல் மரத்தை வெட்டுபவர் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என மன்னாரகுடியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
தமிழகம் முழுவதும் 500 இடங்களில் பனை விதைகள் சேகரிப்பு பணி தொடங்கியது மன்னாா்குடி அருகே தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விதைகள் சேகரிக்கும் பணியை தொடங்கி வைத்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக கடற்கரையோரங்களில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு,
நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து முன்னெடுக்கும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கு பனை விதைகள் சேகரிக்கும் முகாம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த காரியமங்கலம் கிராமத்தில் பனை விதைகள் சேகரிப்பு பணியை, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்
அதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது தமிழக முதல்வரின் ஆணைப்படி தமிழ்நாட்டின் பசுமை பரப்பை 33 விழுக்காடு உயர்த்த தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை கிரீன் நீடா அமைப்பு முன்னெடுத்துள்ளது. இதில் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இது கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்படுகிறது. உலக சாதனை நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது மாநில மரமான பனை மரத்தை வெட்டுவது சட்டவிரோதமான செயல் மரத்தை வெட்டுபவர் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து உள்ளிட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர்கள் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர் .