தனியார் நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மோசடி;  ஊழியர்கள் தப்பி ஓட்டம்..!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இராமநத்தம் தேசிய நெடுஞ்சாலை அருகே  மேக்ஸ் ப்ரோ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனத்தை  பெரம்பலூர் மாவட்டம்  தி. அகரம் கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர்   கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

 இதில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் பத்து மாதத்தில் இரண்டு லட்சமாக தருவதாக கூறி  கடலூர் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை  சேர்ந்த கொரக்கவாடி, அகரம்,  கொத்தனூர், லப்பக்குடிகாடு, திருவாலந்துறை, களத்தூர், பசும்பலூ,ர் பாதாங்கி, சுமார் 30கும் மேற்பட்ட கிராம மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

 இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக அதன் உரிமையாளர் தலைமறைவாகி இருந்த நிலையில் தினமும் முதலீடு செய்த நூற்றுக்கணக்கான மக்கள் நிறுவனத்திற்கு வந்த நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அவர்களிடம் இன்னும் ஓரிரு நாட்களில் பணத்தை திருப்பி தருவதாக கூறி திருப்பி அனுப்பி வந்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் முதலீடு செய்த இருபதுக்கும் மேற்பட்ட மக்கள் நிதி நிறுவனத்திற்கு வந்து பணத்தை கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. 

தகவல் அறிந்து வந்த இராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் போலீசாரை கண்டதும் நிதி நிறுவன ஊழியர்கள் தப்பி ஓட்டம். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *