சந்திரயான் 3 சக்சஸ்; கொண்டாடிய  சிறை கைதிகள்…!

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லாண்டர் – கொண்டாடிய பள்ளி மாணவர்கள், மதுரை மத்திய சிறைச்சாலை கைதிகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் சென்னைக்கு அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்திலிருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில்  வெற்றிகரமாக தரை இறங்கியது. அதனை மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நேரலையாக கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது தொடர்ந்து விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கிய தருணத்தை நேரலையாக கண்டு ரசித்த மாணவர்கள் உற்சாகத்துடன் நண்பர்கள் அனைவரிடமும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதே போன்று மதுரை மத்திய சிறைசாலையில் உள்ள கைதிகள் விக்ரம் லாண்டர் நிலவில் இறங்கும் நிகழ்வினை கண்டுகளிக்க அங்கிருந்த சிறைசாலையில்  தொலைகாட்சி பெட்டியில் நேரலை காண்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *