வீடு புகுந்து மாணவனை தாக்கிய மாணவர்கள்.. தொடரும் பள்ளி வன்முறை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரை சேர்ந்தவர் தனலட்சுமி இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவரது கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் இவர்களுக்கு சரவணகுமார் என்ற ஒரு மகன் மட்டும் உள்ளார் சரவணகுமார் நாடார் மேல்நிலைப் பள்ளியில் (அரசு உதவி பெறும்) பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

நேற்று இரவு சரவணகுமார் மற்றும் சக மாணவர்கள் எட்டையாபுரம் சாலை பகுதியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் அப்போது மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது  

இன்று மாலையில் சரவணகுமார் தனது வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த 12 மாணவர்கள் சரவணகுமாரை செங்கல் கல்லால்  தலையில் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர் உடனே வீட்டின் மற்றொரு அறையில் இருந்த சரவணகுமாரின் தாய் தனலட்சுமி உடனடியாக அவரை மீட்டு  கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார் 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *