குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 பேருக்கு உடல் நலக்குறைவு- மருத்துவமனையில் அனுமதி.
விழுப்புரம் மாவட்டம், முட்டத்தூர் கிராமத்தில் வாகனத்தில் விற்பனை செய்யப்பட்ட குல்பி ஐஸ்ஸை வாங்கி சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டு உடல்நிலை பாதிப்பு அடைந்து முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தைகளுக்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டவர் தானே அனைத்து குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்
உடல் நலம் பாதிக்கப்பட்டதில் பெரும்பாலோனோர் ஐந்து வயது முதல் 10 வயதுக்கு உட்பட்ட பள்ளி குழந்தைகள் ஆகும். பள்ளி அருகே விற்க்கப்பட்ட குல்பி ஐஸ் சாப்பிட்டதனால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குல்பி ஐஸ் சுகாதாரமற்ற தண்ணீரில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ததினால் அதை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது