சிப்காட் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கொலையா? போலீசார் விசாரணை

death

தூத்துக்குடி மீளவிட்டான் குளக்கரையின் நடைபாதை பகுதியில் அழுகிய நிலையில் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு கொலையா?  என சிப்காட் போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தின் மேற்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 

 இந்த நடைபாதையில் இன்று காலை பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் போது அழுகிய நிலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம்  இருப்பதை பார்த்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் துறையினர் அழுகிய நிலையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

அழுகிய நிலையில் இறந்து கிடந்தவரின் அருகில் பைகளில் காப்பர் வயர்கள் மற்றும் சுத்தியல், கட்டிங் பிலேயர், ஆக்ஷா பிளேடு, ஆகியவை இருந்துள்ளது.  இதை அடுத்து காப்பர் வயரை வேறு எங்கு திருடி விற்பனை செய்யும் போது ஏற்பட்ட  தகராறில் கொலை செய்யப்பட்டாரா?  என்ற கோணத்திலும்  கொலை செய்யப்பட்டவர்  எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *