சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூன்று பேர் உடல் நசுங்கி பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் என்ற இடத்தில் திண்டுக்கல்லில் இருந்து இருந்து சென்னை நோக்கி சென்ற கார் இன்று காலை ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இதில் காரில் பயணம் செய்த மூன்று ஆண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர் இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் விசாரணையில் கதிரவன் கார்த்திக் நந்தகுமார்ஆகிய மூவர் எனவும் சென்னை ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்காக சென்ற பொழுது இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்