#வைரல்: பச்சிளம் குழந்தை ஏற்றி வைத்த 77வது சுதந்திர தின தேசியக் கொடி

குன்றக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்து இரண்டு நாட்களே ஆன  பச்சிளங் குழந்தையை தேசியக் கொடி ஏற்ற வைத்து பொன்னம்பல அடிகளார் ஆசி வழங்கினார்

குழந்தையின் தாய் பொன்மலர் மகிழ்ச்சி சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்

யானை மீது அமர்ந்து தேசிய கொடியை கையில் ஏந்திய தேசிய மாணவர் படை மாணவர் முன்செல்ல  ஊர்வலமாக சென்று  பள்ளிகள், கல்லூரி, சண்முகநாதர் கோவில்  அடிகளார் மணிமண்டபம் , குன்றக்குடி மடம் என  10க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது

தருமை கயிலை குருமணி மேல்நிலைப் பள்ளியில் கோலப் பொடியில் வேலு நாச்சியார், மருது சகோதரர், வ உசி, திருப்பூர் குமரன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை தத்ரூபமாக வரைந்த மாணவர்களை பொன்னம்பல அடிகளார் பாராட்டினார்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய கொடி ஏற்ற சென்ற போது அங்கு பிறந்து இரண்டு நாட்களேயான பொன்மலர் என்பவரின் பச்சிளம் குழந்தையை தேசியக் கொடியின் கயிற்றை கொடுத்து குழந்தைக்கு ஆசியும் வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *