தாம்பரம் – நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக தாம்பரம் – நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரயிலை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திங்கட்கிழமை தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயிலானது (வ.எண்.06051) செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை,விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக மறுநாள் செவ்வாய்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு நெல்லை வந்தடையும்.

மறுமார்க்கம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நெல்லையில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயிலானது (வ.எண்.06052) மறுநாள் புதன்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மேலும் இந்த சிறப்பு விரைவு ரயிலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 11 நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *