காலிப் பணியிடங்களை நிரப்ப செவிலியர் சங்கம் ஆர்ப்பாட்டம்…
பாளையங்கோட்டையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பதவி உயர்வு முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திரளான செவிலியர்கள் பங்கேற்பு.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் மத்திய அரசு நிதி தாமத காரணத்தால் மாநில அரசு கிராம சுகாதார செவிலியர் மீது வேலைப்பளுவை சுமத்தியும் பணியில் வழங்கப்பட்ட டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளையும் சேர்த்து பார்த்திட வலியுறுத்தும் அரசின் ஆணையை திரும்ப பெற வேண்டும், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் நியமிக்க வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
முறையாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும் அதன் விரைந்து செயல்படுத்திட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர் மாநில இணை செயலாளர் எலிசபெத் ராணி தலைமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான செவிலியர்கள் பங்கேற்றனர்