நேரப் பிரச்சனையால் பேருந்து நிலையத்தில் பயணிகளை அலறவிட்ட ஓட்டுநர்…!
பேருந்து நிலையத்தில் பயணிகளை அலறவிட்ட தனியார் பேருந்து, அரசு போக்குவரத்து கழக செக் இன்ஸ்பெக்டரை ஏற்றி கொல்ல முயற்ச்சி, பேருந்தை பரிமுதல் செய்து ஓட்டுநர் நடத்துனர் கைது போலீஸ் விசாரனை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இன்று மாலை புதுக்கோட்டை வழியாக செல்லும் இரு தனியார் பேருந்துகளுக்கு இடையே நேரப் பிரச்சனை மற்றும் நடைமேடை யில் முன் பின் வண்டியை நிறுத்தும் பிரச்சனையில் ஆத்திரமடைந்த NNL பேருந்து ஓட்டுநர் நடத்துனர் நடைமேடையில் காத்திருந்த பயணிகளை பின்னோக்கி நடைமேடையை சேதப்படுத்தி ஏற்றியதாக கூறப்படுகிறது
இதனையடுத்து நேரக் காப்பாளர் அறையில் இருந்து வெளியே வந்த கருப்பையா என்ற செக் இன்ஸ்பெக்டரை இடித்து தள்ளும் நோக்கத்தில் மீண்டும் பின்னோக்கி நடைமேடை மீது ஏற்றியதால் கருப்பையா மயிரிழையில் தப்பினார் இரு குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
நடைமேடையில் ஏற்றியதால் பேருந்தின் டயர் சேதமடைந்ததாக கூறப்படுகிறது இதனை செட்டுக்கு எடுத்து சென்று மாற்றிக் கொண்டிருக்கும் போது போலீசார் பேருந்தை பறிமுதல் செய்தனர் தலைமறைவாக இருந்த ஒட்டுநர் ராஜ்குமார் நடத்துனர் பாண்டியை கைது செய்த போலீசார் உரிமையாளரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது