8 ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி, அதிர்ச்சியில் தாத்தா, தந்தை உயிரிழப்பு
8 ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ; சோகத்தில் தாத்தா விஷம் குடித்து தற்கொலை ; புற்றுநோயால் பாதித்த சிறுவனின் தந்தையும் உயிரிழப்பு ; நாகையில் சோகம்
நாகை மாவட்டம் காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தில் வீட்டில் பழுதான பல்பை சரி செய்தபோது திடீரென மின்சாரம் வந்ததால் 8 வயது சிறுவன் கோகுல் உயிரிழப்பு. அதிர்ச்சியில் விஷம் குடித்து கோகுலின் தாத்தா இளங்கோவன் (75) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு கோகுலின் தந்தை பன்னீர்செல்வம் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். நாகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.