உடல்நலக் குறைவுக்காக மெடிக்கலில் சிகிச்சை மேற்கொண்டவர் பலி. போலீசார் விசாரணை. 

சிதம்பரம் அருகே உள்ள சின்னகுமட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர்(23). இவருக்கு கடந்த 4 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் கொத்தட்டை கிராமத்தில் உள்ள ஒரு மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மறுநாள் தனசேகருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து தனசேகரின் தாய் தமிழ்ச்செல்வி இந்த சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தனசேகரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து புவனகிரி வட்டாட்சியர் சிவக்குமார் உயிரிழந்தவருக்கு சிகிச்சை அளித்த கொத்தட்டை கிராமத்தில் உள்ள மெடிக்கல் சென்டருக்கு சீல் வைத்தனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *