நியோமேக்ஸ் சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க, நீதிபதி தலைமையில் குழு அமைக்க மனு

நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முறைப்படி விற்று முதலீட்டாளர்களிடம் பணத்தை ஒப்படைக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி நியோமேக்ஸ் நிறுவனத்தினர் மனு தாக்கல்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோறும் நிறுவனத்தினர் ஏன் சம்பந்தப்பட்ட காவல்துறையிடம் சரணடையவில்லை நீதிபதி கேள்வி. சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம் உரிய ஆவணங்களை ஒப்படைத்து தங்களது கோரிக்கையை வைத்திருக்கலாமே நீதிபதி கேள்வி

நியோ மேக்ஸ்  நிறுவனம் கோரிக்கை குறித்து மாவட்ட பொருளாதார குற்றவியல் போலீசார் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, நியோ மேக்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த பழனிச்சாமி ,பாலசுப்பிரமணியன், அசோக்மித்தா, சார்லஸ், தியாகராஜன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

மதுரையை தலைமையகமாக  கொண்டு நியோமேக்ஸ்  பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக வீரசக்தி, மற்றும் கமலக்கண்ணன் பாலசுப்ரமணியன் என பலர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை கோவில்பட்டி மதுரை பைபாஸ் மற்றும் திருச்சி தஞ்சை என பல மாவட்டத்தில் அலுவலகங்கள் செயல்பட்டன.

நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி DTCP நகர் மற்றும் நகரமைப்பு இயக்குனரக அனுமதி பெற்று, குறைந்தபட்சம் 1000 மனைகளை உள்ளடக்கி லே-அவுட்டை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு மனைகளை விற்கிறோம். 

மனைகளுக்குள் ஹோட்டல், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனையை லே-அவுட்டுக்குள் கட்டுகிறோம். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்களிடம் முழு விவரங்களும் தெரிவிக்கப்பட்டு டெபாசிட் பெறப்பட்டு அதற்கான ரசீது கொடுக்கப்படுகிறது. நிலங்கள் விற்பனைக்கு பிறகு வாடிக்கையாளர் பெயரில் பதிவு செய்து கொடுயப்படுகிறது. NEOMAX GROUP இதுவரை தென் தமிழகத்தில் 16 லே-அவுட் திட்டங்களில் 9கோடியே 79லட்சத்து 89ஆயிரம் சதுர அடியில் (2,249.565 ஏக்கர்)க்கான அரசு  ஒப்புதல் பெற்றுள்ளது.

நாங்கள் பதிவு செய்து கொடுக்கப்பட்ட நில விற்பனை பத்திரத்தை ஒரு அளவிற்கு செயல்படுத்தியுள்ளோம்.

15,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எங்களிடம் 4கோடியே 12லட்சத்து 65ஆயிரத்து 276.35 சதுர அடியில் (DTCP அங்கீகரிக்கப்பட்ட மனைகள்) நிலங்கள் பத்திர பதிவு செய்ய தயாராக உள்ளன.

நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் சொத்துக்கள் நிலங்கள் ஏராளமாக உள்ளன.

இந்நிலையில் சிலர் நியோமேக்ஸ் நிறுவனம் மோசடி செய்ததாக கூறி மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில்  17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

எனவே, எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்சனையை சரிசெய்ய விரும்புவதாகவும், இந்தப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிறுவனத்தின் இயக்குனர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் சிலர் தலை மறைவாக உள்ளனர் பலர் முன்ஜாமின் கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது இந்நிலையில் ஏதோ உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கிட்டத்தட்ட 106 நிறுவனங்கள் பெயரில் பல கோடி ரூபாய் பணம் முதலீட்டாளர்கள்  பெறப்பட்டுள்ளது இந்த பணம்  பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது வெளி மாநிலங்கள் வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இவர்களை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி நியோ மேக்ஸ் நிறுவனம் தங்களது பிரச்சனைகளை தீர்க்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க மனு தாக்கல் செய்துள்ளீர்கள் ஆனால்  ஆனால் விசாரணை போலீசாரிடம் ஏன் சரணடையவில்லை மேலும் விசாரணை அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை ஒப்படைத்து இந்த கோரிக்கையை கேட்டிருக்கலாம் என கேள்வி எழுப்பினார்.

மேலும் மனு குறித்து மாவட்ட பொருளாதார குற்றவியல் போலீசார் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *