தண்ணீர் பாட்டில், கிளாஸ் இலவசமாக தராத வியாபாரியின் மனைவி, மகனை அறிவாளால் வெட்டிய குடிமகன்கள்…!

மது அருந்த தண்ணீர் பாட்டில், கிளாஸ் இலவசமாக தராத வியாபாரியின் கடையை அடித்து நொறுக்கிய கஞ்சா போதை ஆசாமிகள், வீடு புகுந்து வியாபாரி மற்றும் அவரது மனைவி மகனை அறிவாளால் வெட்டிய சம்பவத்தால் பரபரப்பு.

தூத்துக்குடி முத்தையாபுரம் முஸ்லிம் தெரு பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் நாகமுத்து கடந்த 3-ம் தேதி மாலை நாகமுத்துவின் கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்ற கஞ்சா போதை ஆசாமி சரக்கு அடிக்க தண்ணீர் பாட்டில், டம்ளர் கேட்டுள்ளார் இதற்கு நாகமுத்து பணம் கொடுத்து வாங்கிச் செல்ல முகேஷிடம் கூறியுள்ளார். ஆனால் முகேஷ் என்னிடம் பணமா கேட்கிறாய் என்று கூறி பணத்தை கொடுக்காமல் கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளார்.

இதை தொடர்ந்து நாகமுத்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் முகேஷ் மீது புகார் அளித்துள்ளார். நாகமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை  தொடர்ந்து ஆத்திரமடைந்த கஞ்சா போதை ஆசாமி முகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் அன்று இரவு நாகமுத்து வீட்டுக்குள் உள்ளே இறங்கி நாகமுத்து மற்றும் அவரது மனைவி சத்தியபாமா, அவரது  9-ம் வகுப்பு படிக்கும் முத்து இசக்கி ஆகியோரை அறிவாளால் கொடூரமாக வெட்டி உள்ளனர்.

வெட்டு காயங்களுடன் நாகமுத்து குடும்பத்தினர் போராடி அறிவாளால் வெட்டிய முகேஷை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மற்ற இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர். இதைத் தொடர்ந்து அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பி உள்ளனர்.

இதை அடுத்து பாதிக்கப்பட்ட வியாபாரி நாகமுத்துவின் மனைவி  சத்தியபாமா கூறுகையில் இங்கு கஞ்சா போதை ஆசாமிகளால் தங்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குற்றவாளியை நாங்கள் பிடித்து கொடுத்து விட்டோம் மற்ற இரண்டு நபர்களையும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என கூறினார்.

தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா மற்றும் போதை ஆசாமிகளின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கியுள்ள சம்பவத்தால் பொதுமக்கள் வியாபாரிகள் பீதீயடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *