ஆபாச நடன நிகழ்ச்சியை தடுக்க வந்த எஸ்.ஐ-க்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது…
மேலூர் கிராமத்தில் கோயில் திருவிழாவில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நடன நிகழ்ச்சி நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரை கைது செய்த காவல்துறை
ஆபாச நடன நிகழ்ச்சியை காவல் உதவி ஆய்வாளர் நிறுத்தி சொல்லியும் நிறுத்தாமல் உதவி காவல் ஆய்வாளரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ஆபாசமாகவும் அறுவத்தக்க வகையிலும் நடனமாடியதால் ஆபாச நடனம் ஆடுவதை நிறுத்த சொல்லி நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான மேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த மதன் ஆகியோரிடம் கேட்டபோது அவர்கள் அப்படிதான் ஆபாசமாக நடனம் ஆடுவார்கள் என கூறி உதவி ஆய்வாளரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்த நிலையில்
இச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமாகவோ அறுவத்தக்க வகையிலோ நடன நிகழ்ச்சிகளை நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.