மகனின் தற்கொலைக்கு தனியார் பள்ளி நிர்வாகமே காரணம்… தாய் கதறல்…!
மகனின் தற்கொலைக்கு தனியார் பள்ளி நிர்வாகம் தான் காரணம் என கூறி துக்கம் விசாரிக்க வந்த பள்ளி நிர்வாகத்தினரிடம் கொந்தளித்த தாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம், குருநாதபுரம் பகுதியை, சேர்ந்தவர்கள் நாகராஜ்- பார்வதி தம்பதியினர் இவர்களின் மகன் பிரதீப் (17),
பிரதீப் அந்தியூரில் உள்ள தனியார் பள்ளி (மங்களம் மேல்நிலைப்பள்ளி) ஒன்றில் பிளஸ் டூ படித்து வந்துள்ளார், இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை தன்னுடன் படிக்கும் சக மாணவருடன் சண்டையிட்டுள்ளார், அப்போது பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் துரைசாமி என்பவர் இருவரையும் அழைத்து விசாரித்து பிரதீப்பை கடுமையாகத் திட்டி அடித்ததாக கூறப்படுகிறது, தொடர்ந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்,
தொடர்ந்து பிரதீப் வீட்டிற்கு வந்து பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து தனது தாயரிடம் தெரிவித்துள்ளார் , தொடர்ந்து அவரது தாயார் பார்வதி திங்கட்கிழமை பள்ளி வந்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார், இந்நிலையில் பிரதீப் கடந்த 31-ம் தேதி திங்கட்கிழமை அகிகாலை வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்,
தொடர்ந்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிரதீப் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினரிடம் எதுவும் தெரிவிக்காமல் குடும்பப் பிரச்சனை என தெரிவித்து விட்டு அவர்களது சொந்த ஊரான பர்கூர் மலைப்பகுதி, ஊசிமலை கிராமத்திற்கு பிரதீப் பின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர்,
இந்நிலையில் பிரதீப் இறப்பு குறித்து துக்கம் விசாரிக்க கடந்த ஒன்றாம் தேதி பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் சென்றுள்ளனர், அவர்களை பிரதீப்பின் தாயார் பார்வதி கடுமையாக பேசி உங்களால் தான் எனது மகன் தற்கொலை செய்து கொண்டார், நீங்கள் கேட்ட பணத்தை எல்லாம் நகைகள் அடமானம் வைத்துக் கொண்டு வந்து கட்டினேன், ஆனால் எனது மகனை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி , அடித்து அவனை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்போது அவன் தற்கொலை செய்து கொண்டான் என தெரிவித்து கதறி அழுதுள்ளார்,
இதனை அங்கிருந்து அவர்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.