வடமாநில தொழிலாளர்களை கண்டித்து தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

வெளிமாநில தொழிலாளர்களின் வருகையை கண்டித்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம். அதிகாரிகளை கண்டித்து போராட்டக்காரர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயற்சி செய்யும்போது போலீசார்க்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தூய்மை பணி மேற்கொள்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து 80 பேர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டி மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நகராட்சி அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் நகராட்சியின் அலுவலகத்திற்கு உள்ளே வர முயற்சி செய்தனர் அப்போது போலீசார்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து நகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *