மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க முதல்வருக்கு கோரிக்கை.
மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம்: டிசம்பர் 3 இயக்கமானது கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் கடைநிலை வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிமைகளை கண்ணியத்தோடு பெற்று தந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொண்டு வருகிறது அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தும் அவர்களுக்கு உரிமை தொகையும் வழங்கி வருகிறது. அதற்கு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
1. சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 1500/- பெற்று வருகிற மாற்றுத்திறனாளி யாரேனும் ஒருவர் குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தின் தலைவி மகளிர் உரிமைத்தொகை பெற முடியாது என நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையால் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள்.
2. மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள் வழக்கத்திற்கு அதிகமாக செலவுகளை எதிர்கொள்ள குறிப்பாக மருத்துவம் மற்றும் போக்குவரத்து செலவுகளை எதிர்கொள்ள கட்டாயமாக வேண்டியுள்ளது. எனவே மாற்றுத்திறனாளி குடும்பத்தில் ஒருவர் இருந்தாலும் கூட அந்த குடும்பத்தின் தலைவிக்கு உரிமை தொகை வழங்க வேண்டும்.
3. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை காரணமாக கொண்டு குடும்பத் தலைவிக்கு மகளிர் உரிமை தொகையை மறுக்கக்கூடாது என்பதை தமிழக அரசுக்கு வலியுறுத்தி டிசம்பர் 3 இயக்கம் சார்பாக சொல்ல விரும்புகிறோம்.