இரண்டு நாட்களாக ஊருக்குள் சுற்றி திரியும் தொட்டில் கொம்பன் யானை.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது பர்கூர் மலைப்பகுதி, இந்நிலையில் அங்குள்ள வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் சுற்றி திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு பர்கூர் மலை கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை சாலை ஓரம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பலாப்பழங்களை எடுத்து சாப்பிட்டும், சாலைகளில் சுற்றித்திரிந்து கொண்டு இருந்தது,
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அதே ஆண் காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி பர்கூர் கிராமத்திற்குள் புகுந்து, அங்கும் இங்குமாய் சுற்றி திரிந்து கொண்டிருந்தது, தொடர்ந்து காட்டு யானையை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
இந்நிலையில் இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் தொட்டில் கொம்பன் என்ற பெயர் வைத்துள்ளனர், யானையின் தந்தம் வளைந்து தொட்டில் போல் இருப்பதால் இந்த பெயரை வைத்துள்ளனர். அடிக்கடி யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்திற்குள் புகுவதால் அப்பதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.