கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி…!! 

வேப்பூர் அருகே கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி  வேப்பூர் போலீசார் விசாரணை. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் திடீரென்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் உள்ள பள்ளத்தில்  கவிழ்ந்ததில் மூன்று பேர் சம்பவத்தில் பலியானார் 

அதில் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் பின்னர் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை  சேர்ந்த அஜித் என்பவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்

இவர் தனது மனைவி குழந்தை மற்றும் மாமியாருடன் இன்று காலை சென்னையில் இருந்து தேனிக்கு செல்லும்பொழுது வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே கார் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் அஜித், அவரது மனைவி மதுமிதா, மகள் ஜெனிலியாமிர்த்தி, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்

 இதில் அவரது மாமியார் தமிழ்ச்செல்வி பலத்த காயம் அடைந்து வேப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்  தமிழ்ச்செல்வி சிகிச்சை பலனின்றி இறந்தார் இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *