என்.எல்.சி போராட்டத்தால் அரசு பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு…!
கடலூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் கிராமங்களில் அரசு பேருந்துகளை போலீஸ் பாதுகாப்போடு சென்றது -தற்போது வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு. மாவட்டம் முழுவதும் இதுவரையில் 17 அரசு பேருந்துகள் கல் வீச்சில் தாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று அரசு பேருந்துகள் இரவு நேரத்தில் கிராமப் பகுதிகளில் நிறுத்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரவு கிராமங்களில் சென்று பேருந்து நிறுத்திவிட்டு அதிகாலையில் அந்த பேருந்துகள் மீண்டும் கடலூர் நோக்கி வருவது வழக்கம். ஆனால் கிராம புறங்களில் இரவு எந்த பேருந்துகளும் நிற்கவில்லை இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர் அரசு பேருந்துகள் போலீசார் பாதுகாப்போடு சென்றது.
இந்த நிலையில் கடலூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம் போல் அனைத்து பேருந்துகளும் காலையிலிருந்து வழக்கம் போல் இயங்கி வருகிறது
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவம் தொடர்பாக பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஆங்காங்கே ஈடுபட்டுள்ளனர்