புஷ்பா படபாணியில் செம்மரக்கட்டை கடத்தல்… 5 பேர் அதிரடி கைது

செம்மரக்கட்டை கும்பலை வழிமறித்து அவர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் காட்பாடியில் கைது காங்கேயநல்லூர் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து சதி திட்டம் தீட்டி வந்தது விசாரணையில் அம்பலம். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஒரு கார் பறிமுதல்

காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விடுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனை அடுத்து எஸ்.பி உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் விருதம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் தலைமையிலான போலீசார்  காங்கேயநல்லூர் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியை சோதனையிட்ட போது  அங்கு ஒரே அறையில் கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஐந்து பேர் தங்கி இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து ஐந்து பேரை கைது சென்று காவல் நிலையம் அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில்.

இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லன் நகர் பகுதியை சேர்ந்த வசூல்ராஜா என்கிற ராஜா (36), வெள்ளை மோகன் என்கிற மோகன் (31) மற்றும் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (34) மற்றும் காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்த சகோதரர்களான கவுஸ் பாஷா(31) மற்றும் மன்சூர் (38) என்பது தெரியவந்தது. 

இவ் வழக்கின் முதல் குற்றவாளியான காஞ்சிபுரத்தை சேர்ந்த வசூல்ராஜா என்கிற ராஜா மீது ஒரு இரட்டை கொலை வழக்கு உட்பட நான்கு கொலை வழக்குகளும் 17 கொலை முயற்சி ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளதும்.  வெள்ளை மோகன் என்பவர் மீது இரண்டு கொலை வழக்கு உட்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகளும், சதீஷ்குமார் கவுஸ் பாஷா மன்சூர் உள்ளிட்டவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் ஆழ்கடத்தில் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

மேலும் சகோதரர்களான கவுஸ் பாஷா மன்சூர் ஆகிய இருவர் ஆந்திராவிலிருந்து காட்பாடி வழியாக செம்மரக்கட்டைகளை கடத்தி செல்லும் வாகனம் குறித்து தங்களது கூட்டாளிகளுக்கு தகவல் கொடுப்பதாகவும் அதன் பின்னர் 5 பேரும் கூட்டாக சேர்ந்து செம்மரக்கட்டையை கடத்தி வரும் கும்பலை தாக்கி அவர்களிடமிருந்து கட்டை மற்றும் வாகனத்தை பிடுங்கி தப்பி சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில்தான் மற்றொரு சம்பவத்திற்காக காங்கேயநல்லூர் ரோடு பகுதியில் உள்ள விடுதியில் அரை எடுத்து கூட்டாக சேர்ந்து திட்டம் தீட்டி வந்தது காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.  இதனை அடுத்து ஐந்து பேரையும் கைது செய்த விருதம்பட்டு காவல்துறையினர் அவர்களிடம் இருந்து கத்தி, உருட்டு கட்டை, ஒரு இண்டிகா கார், உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *