பாலியல் தொழில் புரோக்கர்… போலிசிடமிருந்து எஸ்கேப் ஆக மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு
இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் மாடியில் இருந்து குதித்து தப்பியோடி முயன்ற போது உயிரிழப்பு
மதுரை டிபி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சென்னையை சேர்ந்த பாண்டியன் என்பவர் தமிழகம், மேற்குவங்களத்தை சேர்ந்த இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 8 பெண்கள் நேற்று மீட்கப்பட்டனர்.
காவல்துறையினர் சோதனையின் போது மாடியின் பின் பகுதியில் பைப் முலம் தப்பிக்க முயன்ற போது பாண்டியன் தவறி விழுந்தது படுகாயமடைந்தார்.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்