கத்தியை காட்டி மிரட்டிய பில் கலெக்டரை தாக்கிய கவுன்சிலர்… வைரல் வீடியோ
சிவகங்கை நகராட்சி அலுவலகத்துக்குள் கத்தியை காட்டி மிரட்டிய பில் கலெக்டர தாக்குதல் நடத்திய நகர்மன்ற உறுப்பினர். வலைதளத்தில் சி.சி.டி.வி காட்சிகள் வைரல்
சிவகங்கை நகராட்சியில் வரிவிதிப்பு தொடர்பாக வரி வசூல் செய்யும் ( பில் கலெக்டர்) சரவணனுக்கும் 7 வது வார்டு கவுன்சிலர் காந்தி. என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட சிசிடிவி காட்சி சிவகங்கையில் வைரலாகி வருகிறது
சிவகங்கை நகராட்சியில் 7 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் காந்தி. (திமுக) இவர் அவரது வார்டிற்குட்பட்ட வீடு ஒன்றிற்கு வீட்டு வரி ரசிது பெற பணம் கட்டியதாக கூறப்படுகிறது. பணத்தை நகராட்சியில் பில் கலெக்டராக பணியிலிருந்த சரவணனிடம் கட்டி நீண்ட நாட்களாகியும் ரசீது வழங்காமல் இழுத்தடித்த நிலையில் நேற்று நகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டர் சரவணனிடம் கவுன்சிலர் காந்தி கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் பில் கலெக்டர் சரவணன் கத்தியை எடுத்து காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கவுன்சிலர் காந்தி சரவணனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அலுவலக சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் தற்பொழுது வாட்ஸ் அப் முகநூலில் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது..
சம்பவம் குறித்து கவுன்சிலர் காந்தி நகர்மன்ற தலைவரிடமும், பில் கலெக்டர் சரவணன் காவல் நிலையத்திலும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர்..