அங்கன்வாடி மேல்கூரை இடிந்து விழுந்து விபத்து… பெற்றோர்கள் பதட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அங்கன்வாடி மேல்கூரை இடிந்து விழுந்ததில் காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பித்த குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
அறந்தாங்கி நகராட்சி அருகே இயங்கி வரும் அங்கன்வாடியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர் அங்கன்வாடி மூன்றாவது வாரத்தின் புதன்கிழமை தோறும் சுகாதாரத் துறை சார்பாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில்
இன்று 15 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பெற்றோர்களுடன் வந்த நிலையில் 13 பேர் தடுப்பு ஊசி போட்டுவிட்டு சென்றனர் மீதும் இரண்டு பேருக்கு தடுப்பூசி போடும் நிலையில் திடீரென கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது அப்போது சிறிய காயங்களுடன் மயிரிழையில் குழந்தைகள் உயிர்த்தப்பினர்.
சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இப்பள்ளி வளாகம் மேற்கூரை இடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் புணர அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் தற்போது மேற்கூரை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.