மதுபோதையில் அலப்பறை செய்த பயணியை வச்சு செய்த டிரைவர், கண்டக்டர்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேருந்து நிலையத்தில் ஓய்வறையில் இரவு உணவு சாப்பிட்டு கொண்டிருந்த டிரைவர், கண்டக்டரிடம் பேருந்தை எப்போ எடுப்பீங்க என  மது போதையில் கேட்ட பயணியை  நடத்துனர் ,ஓட்டுனர் இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கைக்கு இரவு 9.30 மணிக்கு 18ம் எண் அரசு டவுன் பஸ்  1நின்று கொண்டிருந்தது அதில் பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். டிரைவர், கண்டக்டர் இருவரும் ஓய்வறையில் இரவு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளனர். 

அப்போது  மது போதையில் ஒரு பயணி டிரைவர் அறைக்கு சென்று பேருந்து எப்போது எடுப்பீர்கள் என கேட்டு தகராறு செய்துள்ளார்.  இதில் பயணிக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு அடிதடி ஆகியுள்ளது. தகவல் அறிந்து இரவு ரோந்து  போலீசார் பஸ் ஸ்டாண்ட் வந்து ஓட்டுனர் நடத்துனரை சமாதானம் செய்து காலையில் காவல் நிலையம் வந்து விசாரணைக்கு வருமாறு அனுப்பி வைத்தனர். 

பயணியை டிரைவர் , கண்டக்டர் தாக்கும் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதே போல் திருப்புவனம் அருகே குருந்தங்குளம் சென்று திரும்பிய அரசு டவுன் பஸ்சின் முன் பக்க கண்ணாடியை சிலர் போதையில் கல் எறிந்து உடைத்து விட்டு தப்பியோடி விட்டனர். 

திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவங்களில ஈடுபட்ட நபர்கள், போக்கு வரத்து  ஊழியர்கள் பெயர் ‘விபரம் தெரிய வில்லை. காலையில் விசாரித்து சொல்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *