கிணற்றில் தவறி விழுந்து தாய், மகள் இருவரும் பரிதாப பலி… 

மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து தாய் – மகள் பலி. நெஞ்சை உறைய வைத்த சம்பவம். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கோசிபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி பிரியா (வயது 25). இந்த தம்பதியினரின் 8 மாத கைக்குழந்தை வர்ஷினி. 

இன்று  பிரியா தனது மகளை தூக்கி கொண்டு அருகில் உள்ள தங்களது விவசாய தோட்டத்தின் கிணற்றில் கம்ப்ரசர் மோட்டார் சுவிட்சை போட்டு விட்டு பின்னர் ஆழ்குழாயில் இருந்து வரும் தண்ணீர் கிணற்றில் ஊற்றுகிறதா என்பதை எட்டிப்பார்க்க முயன்றுள்ளார்.

அப்போது தாய் மகளுடன் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இதில் தாய் – மகள் இருவரும் உயிரிழந்த நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் இருவரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் அனைவரின் நெஞ்சத்தையும் உருக்குலைய செய்திருக்கிறது. தாய் – குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *